திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்

திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்.

Update: 2022-06-17 06:33 GMT
மேட்டூர் அணையில் இருந்து வரும் அகண்ட காவிரி ஆறு, காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரியும் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த மிக பழமையான கதவணை கடந்த 2019ம் ஆண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சுமார் ரூ.400 கோடியில் புதிய கதவணை கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த புதிய கதவணையை வருகிற 26ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் கதவணை கட்டுமான பணிகளை ஆய்வு  செய்த தமிழக நகராட்சி நிர்வாக துறை மைச்சர்  கே.என்.நேரு இன்று இதனை தெரிவித்தார்.
Tags:    

Similar News