திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

திருச்சி பேராசிரியையிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-20 14:28 GMT

திருச்சி கே. கே. நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 19 -2 -2020 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.இதுபற்றி பேராசிரியை அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இன்று சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ராகுல் (வயது21).காஜாமலையை சேர்ந்தவர் அவரிடம் இருந்து பேராசிரியையிடம் வழிப்பறி செய்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பரிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளியைக் கைது செய்த கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Tags:    

Similar News