திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்

திருச்சியில் சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடுகள்-கன்றுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-15 14:31 GMT

அரியலூரில் இருந்து மணப்பாறை சந்தைக்கு சரக்கு ஆட்டோவில் விற்பனைக்காக 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை ஏற்றி சென்றனர். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பழைய பால்பண்ணை அருகே சரக்கு ஆட்டோவில் மாடுகளை கொண்டு செல்வதை கண்ட ஒருவர், காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சரக்கு ஆட்டோவில் 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை அடைத்து வைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாடுகளுடன் சரக்கு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News