பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவியை கடத்தியதாக இளைஞர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-01-07 04:00 GMT
பைல் படம்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 4-ந் தேதி காலை பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து மணிகண்டம் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரின் மகன் கெர்சோம் (வயது 21) என்பவர் மாணவியை கடத்தி சென்று திருப்பூரில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபர் திருமணம் செய்யும் நோக்கில் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. அதன்பேரில், கெர்சோம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News