மணப்பாறை அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு

மணப்பாறை அருகே காணாமல் போன வாலிபரை கிணற்றில் பிணமாக மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-14 07:33 GMT

திருச்சி மாவட்டம், என்.பூலாம்பட்டி அருகே உள்ள மதலைப்பட்டியைச் சேர்ந்தவர் மரியசூசை(வயது 35). இவர், கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் என்.பூலாம்பட்டியில் உள்ள கிணற்றில் மரியசூசை பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரியசூசை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் எப்படி இறந்தார்? வேறு யாரேனும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா?  என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News