மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா?

மணப்பாறையில் இந்த பெண்ணை போலீசார் தூக்கி வருவது ஏன் தெரியுமா? என்பதை அறிய கீழே படியுங்கள்.

Update: 2022-07-24 07:40 GMT

தமிழ்நாடு முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத வந்தால் அவர்கள்  உள்ளே செல்வதற்கு வசதியாக சாய்தளம் அமைக்கப்படவேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் மணப்பாறையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சாய்தள வசதியும், வீல் சேர் வசதியும் இல்லாததால் சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் ஆகியோர் வைத்தாங்கலாக தேர்வு மையத்திற்கு தூக்கி சென்றனர். போலீசாரின் இந்த உதவிகரமான செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News