தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 920 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2021-06-02 15:00 GMT

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை  (பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,22,065 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 49,125 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40,695 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது 6,882 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,630 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 920 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 924 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News