திருவையாறில் 31 பேருக்கு கொரோனா

Update: 2021-05-08 16:30 GMT

திருவையாறு தாலுக்காவில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

திருவையாறு பேரூராட்சி பகுதியில் 8 பேருக்கும், புனவாசலில் ஒருவருக்கும், கடுவெளியில் ஒருவருக்கும், பொன்னாவரையில் 5 பேருக்கும், வைத்தியநாதன்பேட்டையில் ஒருவருக்கும், செம்மங்குடியில் ஒருவருக்கும், செந்தலையில் ஒருவருக்கும், மேலத்திருப்பூந்துருத்தியில் ஒருவருக்கும், தென்பெரம்பூரில் ஒருவருக்கும், நடுக்காவேரி பாசாரில் ஒருவருக்கும், ஆவிக்கரையில் ஒருவருக்கும், கண்டியூரில் இரண்டுபேருக்கும், திருச்சோற்றுத்துறையில் ஒருவருக்கும், பெரமூரில் ஒருவருக்கும். அரசூரில் ஒருவருக்கும், மணக்கரம்பையில் ஒருவருக்கும், அணைக்குடியில் ஒருவருக்கும் , ஆக மொத்தம் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 31 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிரிமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடுபத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்துகொள்ளவும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

Tags:    

Similar News