தடையை மீறி நடந்த மாட்டு வண்டி பந்தயம்: 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே ஊரடங்கு விதியை மீறி, ரேக்ளா வண்டி பந்தயம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-04 15:45 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங்காடு மெயின் ரோட்டில், ரேக்ளா வண்டி பந்தயம் நடந்ததுள்ளது. இந்த போட்டியில், ஏராளமான இளைஞர்கள், டூ விலரில் சத்தம் போட்டப்படி மிக உற்சமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து நேமம் வி.ஏ.ஓ., அருண்குமார், திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், திருக்காட்டுபள்ளி போலீசார் வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேக்ளா வண்டி போட்டியில், ஈடுப்பட்ட லால்குடி அடுத்த டால்மியாபுரத்தை சேர்ந்த சிவா,39, கூடநாணல் கிராமத்தை சேர்ந்த தமிழரசன்,37, இளங்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார்,48, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான அல்லுார் கிராமத்தை சேர்ந்த பிரகதீஸ்,28, என்பவரை தேடி வருகின்றனர். அத்துடன், ரேஸூக்கு பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News