சுவாமிமலையில் தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை

Update: 2021-08-22 02:00 GMT

சுவாமிமலையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தமிழக முதல்வர் அரசு ஆணையின்படி தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சுவாமிமலையில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாமை, பேரூர் கழக செயலாளர் பாலசுப்ரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கத் தலைவர் சிவக்குமார், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் செந்தில், துணைத் தலைவர்கள் பக்ருதீன், புருஷோத்தமன், ராஜா, துணை செயலாளர்கள் அசோகன், முகமது யாசின், பாலமுருகன்.

சட்ட ஆலோசகர் விஜயகுமார், சங்க ஆலோசனை குழுவினர்கள் கல்யாணகுமார், பரமசிவம், கோபால், சிங்காரவேல், செயற்குழு உறுப்பினர்கள் முனியாண்டி ரவி, பெரியசாமி, டீக்கடை சரவணன், ஷாஜகான், அன்பு டீக்கடை, வெங்கடேஷ், சரவணன், ராகவன், பாலு ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களை இணைத்தனர். நலவாரிய உறுப்பினர்களாக தங்கள் பதிவை செய்து கொண்டனர்.

Tags:    

Similar News