கும்பகோணம் பகுதியில் திடீர் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், ஏரகரம், பட்டீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது

Update: 2021-11-18 11:15 GMT

கும்பகோணத்தில் பெய்த திடீர் கனமழையால் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதி

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், ஏரகரம், பட்டீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு   கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் திடீர் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியதன் காரணத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News