மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்
ஜஸ்ட் டயல் நிறுவனத்தை கண்டித்து மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு.;
மதுபோதையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ராஜா அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இவர் வாடகைக்காக ஜஸ்ட் டயல் எனும் ஆன்லைன் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சந்தாதாரராக உள்ளார். இந்நிலையில் கடந்த 21 ம் தேதி பெங்களூரில் இருந்து வாடகை எடுத்ததில் ஒரே தகவல் மேலும் சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் கொடுத்த 16 ஆயிரத்து 800 ரூபாயை ராஜா திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அந்நிறுவனம் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் அதிருப்தி அடைந்த ராஜா மதுபோதையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.