மணல் திருட்டு : டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல்

Update: 2021-04-20 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆரியூர், மேலக்குளம் பகுதிகளில் மணல் திருட்டு தடுப்பு தொடர்பாக டிஎஸ்பி,. அருள்மொழி அரசு ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த பகுதியில் சுமார் 1 யூனிட் மணலுடன் கூடிய டிராக்டர் ஒன்றும் டிப்பர் லாரி மணலோடு நின்று கொண்டிருந்ததை ஆய்வுக்கு சென்ற அன்னவாசல் போலீசார் பார்த்து மணல் லாரி மற்றும் டிப்பரை கைப்பற்றி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News