தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

விராலிமலை அருகே வாழ்வாதாரம் பாதித்த தெரு கூத்து கலைஞர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

Update: 2021-06-07 01:29 GMT
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வாழ்வாதாரம் இன்றி தவித்த தெரு கூத்து கலைஞர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றியம் அகரப்பட்டி ஊராட்சி காயாம்பட்டியில்  சுமார் 50  மேற்பட்ட தெரு கூத்து கலைஞர்கள் வசிக்கின்றனர். இவர்கள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் விராலிமலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரு கூத்து கலைஞர்களுக்கு வீடு தேடி சென்று அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். 

Tags:    

Similar News