விராலிமலையில் பணத்தை நம்பி அதிமுக ; மக்களை நம்பி திமுக

விராலிமலை தொகுதியில் அதிமுக பணத்தை நம்பி போட்டியிடுகிறது. திமுக மக்களை நம்பி போட்டியிடுவதாக திமுக வேட்பாளர் கூறினார்.

Update: 2021-03-24 12:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரும்  தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சருமான  விஜயபாஸ்கருக்கும், திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனுக்கும்  கடும் போட்டி நிலவுகிறது.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் பேசும்பொழுது, தனக்கு பிரசர் சுகர் போன்றவை இருக்கிறது. என்னுடைய உடலையும் பொருட்படுத்தாமல் தொகுதி மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். எனக்கு கட்டாயமாக நீங்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கைவாசல் பகுதியில்  பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன்,'  இந்த தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை வைத்து வெற்றி பெறலாம் என அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் நினைக்கிறார்.  நான் மூன்று முறை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவி உள்ளேன். மீண்டும் திமுக சார்பில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்களை நம்பி  வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். அவர் பத்து வருடங்கள் செய்த அனைத்தையும் நான் வெற்றி பெற்றால் பத்து நாட்களுக்குள் உங்களுக்கு செய்துவிடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

தொடர்ந்து ஒருவரே எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெறுவது ஜனநாயகத்திற்கே அழகல்ல. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி வருகிறார்.



Tags:    

Similar News