கோவிட்19 தடுப்பூசி போடும் முகாம்களை ஆய்வு செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்

Update: 2021-06-12 16:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்

மேலும் அவர் அங்குள்ள மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள் என்றும், எங்கு சென்றாலும் முககவசம் அணிந்து செல்லுங்கள் என்றும் பொது மக்களிடம் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News