புதுகை: இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இணைந்த இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்ட சிஇஓ முன்னிலையில், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இளைஞர்களை ஆர்வமுடன் இணைந்தனர்.

Update: 2021-12-03 01:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட சிஇஓ சாமி சத்தியமூர்த்தி முன்னிலையில்,  இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இணைந்த இளைஞர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் புலிவலம் நடுநிலைப் பள்ளியில்,   இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியை,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள 5 தன்னார்வலர்கள் தங்களை முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணைத்துக் கொண்டனர். இல்லம் தேடிக்கல்வி கலைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

புலிவலம் ஊராட்சி மன்றத்தலைவர் கருப்பாயி,திருமயம் வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் குல்ஜார் பானு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரப்பன், சரவணன், ஆசிரிய பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பள்ளித்தலைமை ஆசிரியை சாந்தசீலா மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பார்வையிட்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியினை பார்வையிட்டு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் மாணவர்கள் கற்றல் மேற்கொள்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News