பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.

Update: 2021-06-09 04:06 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பைக்கில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள ஒலியமங்கலம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் வினோத்..

இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் காயம்பட்டி செல்லும் சாலை கொக்குப்பள்ளம் என்ற இடத்தில் செல்லும்  போது மர்ம கும்பல் 6 பேர் சேர்ந்து வழிமறித்து வினோத்தை சரமாரியாக அரிவாளால் காலில் வெட்டினர். 

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வினோத்தின் சகோதரர் சூர்யா ஆகியோர் ரத்தவெள்ளத்தில் கிடந்த வினோத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்..

 இது தொடர்பாக காரையூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News