பொன்னமராவதியில் பொது இடத்தில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை

பொன்னமராவதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு பதற்றம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது;

Update: 2021-09-10 07:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட, பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு பதற்றம்  ஏற்பட்டது.

இந்து பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களுடைய வீதிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து பூஜை செய்த பின்னர் நீர் நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது கொரோனா கால கட்டமாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக கூட கூடாது என்பதற்காக மேலும் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கும் தமிழக அரசு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு யாரும் வீதிகளில் விநாயகர் சிலை வைக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது. ஆனால், இந்தத் தடையையும் மீறி இந்து முன்னணியினர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே விநாயகர் சிலை வைத்துள்ளனர். 

இதனை அகற்ற, வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் சென்றபோது அங்கிருந்த இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை அகற்றினால் அதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளதால்,  பொன்னமராவதி காவல் நிலைய ஆய்வாளர் தனபாலன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,

Tags:    

Similar News