அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருதூதுவமனையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-19 08:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று அரசு மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார் இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் என பலர் உடனிருந்தனர்

தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் கொரோன சிகிச்சை வார்டுகளில் எவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்தார்

அதேபோல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார் அதேபோல் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு இருக்கும் இடத்தையும் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்

Tags:    

Similar News