பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு

Update: 2021-04-11 04:30 GMT

அறந்தாங்கி அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்கபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராம பகுதியில் பிறந்து இரண்டு நாளே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. மூக்குடி கிராம நீர்வரத்து வாரி பகுதியில் பிறந்து 2 நாளே ஆன நிலையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியில் சென்ற பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News