1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Update: 2021-05-18 16:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சியில் டி.எஸ்.பி., முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருக்காகுறிச்சி தெற்கு தாளக்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவகற்காக 4 பேரல்கள் மற்றும் 5 குடங்களில் சுமார் 1500 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் அழித்தனர். மேலும், இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.


Tags:    

Similar News