அமைச்சர் ஓ.எஸ். மணியன் தேர்தல் பிரச்சாரம்

Update: 2021-03-29 06:00 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமைச்சர் ஓ எஸ் மணியன் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேதாரண்யம் ஊராட்சி செம்போடை நாகக்குடையான் நடு சாலை, ஜீவா நகர், வாடிவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஈடுபட்டார். இதில் அவருக்கு பட்டாசுகள் வெடித்தும் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வரவேற்றனர்.கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பேசி பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த வாக்கு சேகரிப்பின் போது அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் கமலா அன்பழகன் உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News