தங்க நகைக்காக மண்வெட்டியால் தாக்கிய மூவர் கைது - ஈரோடு இரட்டைக் கொலை!

இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்க, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.;

Update: 2025-05-19 06:10 GMT

ஈரோடு: வயதான தம்பதியை மண்வெட்டியால் கொன்ற மூவர் கைது – கொடூரம் அம்பலம்!

ஈரோடு, மே 19, 2025:  ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி பகுதியில், தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் ராமசாமி (75) மற்றும் பாக்கியம்மாள் (65) மே 2ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை நடந்த வீட்டில் 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது, இது கொள்ளை நோக்கில் செய்யப்பட்ட கொலை என போலீசார் சந்தேகிக்க வைத்தது. தம்பதியின் மகன், இருவரையும் தொடர்புகொள்ள முடியாததால், அண்டை வீட்டாரை அழைத்து பார்த்தபோது, இருவரும் ரத்தக்ககோளத்தில் கிடந்தனர்.

இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்க, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணையின் போது, அறச்சலூர் பகுதியை சேர்ந்த பழங்குற்றவாளிகள் ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தென்னை மரம் ஏறும் தொழிலாளிகள் என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரியவந்தது.

குற்றவாளிகள், தம்பதியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் பல்லடத்தில் நடந்த மூவர் கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News