நாட்டுப்புற பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு

வேதாரண்யத்தில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டார்.

Update: 2021-05-20 10:15 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு, மண் மனம் மாறாத நாட்டுப்புற இசை மூலம் ,  பாடல்களை பாடி , கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். 

பாடல்களை பள்ளி ஆசிரியர் தமிழ்மணி என்பவர் எழுதி நாட்டுப்புற தெம்மாங்கு கலைஞர்ளால் பாடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள்  பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News