வேதாரண்யம் கடற்கரையில் ஏலக்காய் மூட்டை

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் ஏலக்காய் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-03-10 05:33 GMT

வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்பரப்பில் இரண்டு மூட்டைகளில் 100 கிலோ எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்பரப்பில் கடலில் இரண்டு மூட்டைகள் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவ்வழியாக சென்ற பத்திரிகையாளர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூட்டையை கைப்பற்றினர். பின்னர் மூட்டையை காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். அதில் ஏலக்காய் இருப்பது தெரியவந்தது. இது இலங்கைக்கு கடத்துவதற்காக சென்றதா அல்லது வேறு கடத்தல் பொருட்களோடு வந்ததா என கடலோர காவல் படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News