நாகை: வீட்டில் இருந்த சிலிண்டரை திருடி சென்ற நபருக்கு போலீஸ் வலைவீச்சு

நாகையில் வீட்டில் இருந்த சிலிண்டரை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-25 03:04 GMT
தனது வீட்டில் சிலிண்டர் திருட்டு போனது பற்றி சரோஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மத்திய  அரசின் மாதாந்திர சிலிண்டர் விலை உயர்வால் நடுத்தர குடும்ப பெண்மணிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நாகையில் வீட்டிலிருந்த புதிய சிலிண்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கோவில் பூசாரியான இவர் தனது மனைவி சரோஜா, மகன் சக்திதாஸ் ஆகியோரோடு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே கடந்த மாதம் 23 ஆம் தேதி புக்கிங் செய்து, 27 ஆம் தேதி 1050 ரூபாய் கொடுத்து வாங்கிய சிலிண்டரை வீட்டின் வராண்டாவில்  வைத்துவிட்டு நேற்று இரவு மூவரும்  உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி அணிந்துக்கொண்டு வீட்டு வாசலின் கேட்டை திறந்து  உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் வராண்டாவில் இருந்த சிலிண்டரை நகர்த்தும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு சக்திதாஸ் வெளியே வந்தபோது சிலிண்டரை திருடிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியுள்ளார்.

தொடர்ந்து அவரை துரத்தி பிடிக்கவே, அவரை தள்ளிவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி முகமூடி அணிந்து வந்த இருவரும் தப்பி சென்றுள்ளனர். நள்ளிரவு நடந்த சிலிண்டர் திருட்டு சம்பவம் குறித்து தியாகராஜன், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் கடும் சிலிண்டர் விலை ஏற்றத்தால் குடும்ப பெண்மணிகள் கலக்கத்தில் இருந்து வரும் நிலையில், நாகையில் வீட்டில் இருந்த சிலிண்டரை மட்டும் குறித்து வைத்து மர்ம கும்பல் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News