படிக்க செல்வதற்கு படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மலைகிராம மாணவர்கள் தினமும் பேருந்தில் அந்தரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்

Update: 2021-12-22 10:29 GMT

பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மலை கிராம மாணவர்கள் பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லை என்பதால் கூட்ட நெரிசலில் பேருந்தில் ஆபத்தான முறையில் அந்தரத்தில் பயணம் செய்து வருகிறார்.

பள்ளி மாணவர்களின் இத்தகை ஆபத்தான பேருந்தில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. விபத்தை தவிர்க்க உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்மென சமூக ஆர்வலர்கள் வேண்டுக்கோள்.

Tags:    

Similar News