அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

அஞ்செட்டி அருகே இரண்டு வருடத்திற்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-11-29 06:07 GMT

அஞ்செட்டி பஞ்சாயத்து மூலம் சாலை சரிசெய்யப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பஞ்சாயத்தில் அஞ்செட்டி முதல் மரியாளம் வரை பேருந்து வசதி சுமார் 2 வருடங்களாக சாலை துண்டிக்கப்பட்டு பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அஞ்செட்டி பஞ்சாயத்து மூலம் சாலை சரிசெய்யப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை அஞ்செட்டி பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

மேலும் துணை தலைவர் மன்னார், பஞ்சாயத்து செயலாளர் தவமணி, கவுன்சிலர் ரத்தினம், முனியப்பன், வார்டு உறுப்பினர்கள் மாணிக்கம், பசுவன், சிவா, எல்லப்பன், சந்திரசேகர், ராஜா மற்றும் பொதுமக்கள் ஏராளமானார் கலந்துகொண்டனர்.இதனால் இப்பகுதி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த மகுழ்ச்சி அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News