மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்

அஞ்செட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-11-28 06:42 GMT

அஞ்செட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணம்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் தேன்கனிக்கோட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்செட்டியில் நேற்று மக்கள் விழிப்புணர்வு நடைபயண பிரசாரம் நடந்தது.

தளி தொகுதி பொறுப்பாளர் அப்துல்ரகுமான் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தேன்கு அன்வர் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அஞ்செட்டி ராமர்கோவிலில் துவங்கி உரிகம் சாலையில் உள்ள தேவன்தொட்டி வரை 4 கிலோ மீட்டர் துாரம் துாரம் நடைபயணம் செய்து மக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.

மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, தேன்கனிக்கோட்டை முன்னாள் நகர தலைவர் தாஸ், வட்டார தலைவர் மாது, அஞ்செட்டி பர்கத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News