நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் இலவச தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், நாளை இரண்டு இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2021-06-29 15:02 GMT

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60க்கும் கீழாக குறைந்தது.

கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை மாவட்டம் முழுவதும் 12 க்கும் மேற்பட்ட மையங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.

அதேபோல், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், எஸ்.டி இந்துகல்லூரி உட்பட 2 மையங்களில் பொதுமக்கள் நாளை இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை காலை இரண்டு மையங்களிலும், 8-30,  மணிக்கு டோக்கன் கொடுக்கப்படும் என்றும்,  அதற்கு முன்னதாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொதுமக்கள் உணவு உட்கொண்டு, தடுப்புசி மையங்களுக்கு வரவேண்டும் என  மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News