ஒரேநாளில் 19 குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு: போலீஸ் அதிரடி

குமரியில், ஒரே நாளில் குற்றவாளிகள் 19 பேர் மீது, நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2021-09-24 00:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில்,  தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் செயல்களை தடுக்கும்  வகையில், காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி காவல்துறை எச்சரிக்கையை மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அவ்வகையில், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கையாக ஒரே நாளில் 19 நபர்கள் மீது பிணை நிறைவேற்றபட்டு உள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து, குற்றச்செயல்களை குறைப்பதோடு, அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News