தெருநாயிடம் சிக்கிய சிறுவன்: காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

விளையாடி கொண்டிருந்த போது தெரு நாய் கடித்ததில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Update: 2024-06-27 05:15 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டம்,  பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது குழந்தை நிர்மல்ராஜ் வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்ததில் வாய் பகுதியில் பலத்த காயம் அடைந்த சிறுவன் முதலுதவிக்குப்பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகன் நிர்மல்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டதும் கடிக்க முயன்றுள்ளது.

நொடிப் பொழுதில் தெரு நாய் குழந்தையின் வாய்ப்பகுதி முழுதும் கடித்துக் குதறியதில் குழந்தையின் வாய்ப்பகுதி பலத்த காயம் ஏற்பட்டது.

குழந்தை நிர்மல்ராஜ் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை பாலாஜி நாயிடம் இருந்து குழந்தையை மீட்க முயலும் பொழுது பாலாஜியையும் கடித்து விட்டு நாய் தப்பி ஓடி உள்ளது.

உடனடியாக குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சமீபகாலமாகவே தெருநாய்கள் பிரச்சனை அதிகம் இருக்கும் நிலையில் அப்பொழுது பொதுமக்களும் குழந்தைகளும் பாதிப்பு உள்ளாகி வரும் நிலையில் தற்போது ஐந்து வயது சிறுவனை வாய் முழுவதும் கடித்துக் கொதறிய தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News