வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-27 06:30 GMT

 ஈரோட்டில்,  தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து,  டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக,  ஈரோட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளைமாட்டுச்சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து,  ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதையடுத்து ரயில் நிலையம் முன்பாக , ஆர்ப்பாட்டக்காரர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில்  ஈடுபட்ட 12பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News