ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு: போலீசார் விசாரணை

ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-12 11:00 GMT

ஈரோடு ரயில் நிலையம்.

ஈரோடு ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை பகுதியில் தண்டவாள பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்த ரயில் பயணிகள், ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த இளைஞர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.

ஆனால் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Tags:    

Similar News