அந்தியூர் அருகே வனப்பகுதியில் காட்டு யானை பலி

அந்தியூர் அருகே பர்கூர் வனச்சரகத்தில், மலைச்சரிவில் கால்தவறி விழுந்து காட்டு யானை ஒன்று பலியானது.

Update: 2021-06-24 04:15 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட கோவில் நத்தம் வனப்பகுதியில், பர்கூர் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, வடபர்கூர் காப்புக்காடு கௌரிமடுவு என்னும் இடத்தில் மலைச்சரிவில் காட்டு யானை ஒன்று தலையில் அடிபட்டு இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, வனத்துறையினர் பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட வனச்சரக அதிகாரி,  சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணை நடத்தினார். இதில், மலைச்சரிவில் யானை வரும் போது கால் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து,  அரசு கால்நடை உதவி மருத்துவர் சுரேஷை வரவழைத்து யானையின் உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலை வனவிலங்குகளின் உணவிற்காக அங்கேயே விடப்பட்டது.

Tags:    

Similar News