விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அந்தியூரில் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-23 11:30 GMT

பைல் படம்.

அந்தியூர் கெட்டிசமுத்திரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது சகோதரி ரேவதி. ரேவதிக்கு திருமணமாகி 2 மகள்களும், முத்துசாமி (26) என்ற மகனும் உள்ளனர்.செந்தில்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்தியூர் இரட்டை கரடு பகுதியில் உள்ள ஒரு பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) குடித்தார். உடனே அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News