மகளிர் தினத்தில் அமைச்சர் மதிவேந்தனின் பேச்சு
உலக மகளிர் தினத்தில், 30 லட்சம் ரூபாய் உதவிகள் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்;
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நாமக்கல்லில் உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் "ஆண்களாகிய நாங்கள் வெளியில் வெற்றிகரமாக பணிகள் மேற்கொள்ள முக்கிய காரணம் வீட்டை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளும் பெண்கள் தான், பெண்களால் தான் ஆண்கள் வெற்றி பெற முடிகிறது" என்று பெருமைப்படுத்தி பேசினார், இந்நிகழ்ச்சி கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது, முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிருக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார், அதையடுத்து நாமக்கல் விழாவில் எம்.பி. ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ. ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர், அமைச்சர் மதிவேந்தன் 55 பேருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், அவரது உரையில் "இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 17 லட்சத்து 33,696 சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு லட்சத்து 5,235.46 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்துள்ளது" என்று தெரிவித்தார், நிகழ்ச்சியின் பின்னர் நாமக்கல் மாநகராட்சி பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனி டி.ஆர்.ஓ. (நில எடுப்பு) 'சிப்காட்' அலுவலகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் தனி டி.ஆர்.ஓ. சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, கல்லூரி முதல்வர் கோவிந்தராசு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.