அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2021-05-21 04:29 GMT

காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பெண்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தொல்லி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மி (55). இவர் அங்குள்ள வனப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் பொம்மியை தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவரது கணவர் சம்பவம் குறித்து பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொம்மியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து பர்கூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News