பொம்மிடி அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை

பொம்மிடி அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-09 06:00 GMT

பொம்மிடியை அடுத்த விடிவெள்ளி நகர் பகுதியை சார்ந்தவர் அசோக்குமார் 35. இவரது மனைவி மவுனிகா 30. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சபரி வயது 8 என்ற மகன் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே, தம்பதி  இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

பின்பு, மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டு மின் விசிறியில் தூக்கு போட்டு மவுனிகா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News