பொம்மிடி அருகே பெண் சிசு இறப்பில் மர்மம்: போலீஸ் விசாரணை

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பெண் சிசு இறப்பில் உள்ள மர்மம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-06-19 08:25 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள சந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி தமிழரசி (வயது20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, கடந்த 5-ந்தேதி சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் கடத்தூர் அருகே உள்ள புதுரெட்டியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

அங்கு குழந்தைக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. மேலும் குழந்தையின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த தமிழரசி,  அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

இந்நிலையில் பெண் சிசுவின் சாவில் மர்மம் இருப்பதாக, கடத்தூர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் சிசு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags:    

Similar News