பாப்பிரெட்டிப்பட்டியில் இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, சிபிஐ சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-28 15:15 GMT

 விசிக, சிபிஐ, சிபிஎம் சார்பில்,  பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பேருந்து நிலையம் முன்பு சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து, விசிக இளஞ்சிறுத்தை பாசறை மாநில துணைச்செயலாளர் அதியமான் தலைமையிலும், சிபிஐஎம் வட்டச் செயலாளர் வஞ்சி முன்னிலையிலும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து கிலோ விதம் உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News