கம்பை நல்லூர் அருகே பேஸ்புக்கில் காதல் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கம்பை நல்லூர் அருகே பேஸ்புக்கில் காதல் செய்ததாக வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-16 17:15 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவி. இவர் கடந்த 22ம் தேதி  வீட்டில் இருந்து மாயமானார்.

இது குறித்து அவரது தந்தை அளித்த புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மாணவியை கடத்தி சென்றதாக, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செந்துார்பாண்டியன் (வயது 21, ) என்பவரை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பேஸ்புக் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.

Tags:    

Similar News