அரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

அரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.

Update: 2022-04-11 01:30 GMT

அரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம்,  தனியார் மஹாலில் நடைபெற்றது. அரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்க சார்பில்,  சேலம் மண்டல தலைவர் மற்றும் தர்மபுரி மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் அரூர் ரவுண்டானா கச்சேரி மேட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளை நிற சட்டை அணிந்து கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

திருவிக நகர், ஸ்டேட் பேங்க் மஜித் தெரு வழியாக பேருந்து நிலையம் வரை சென்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வைக்கப்பட்ட கொடியை ஏற்றினர். இதனைத் தொடர்ந்து தனியார் மஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் மே மாதம் 5ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள 39வது வணிகர் தின மாநாட்டில் கலந்துக்கொள்வது, சங்க வளர்ச்சி நிதி, வணிகர்களின் தேவைகள் பற்றி அரசிடம் மனு கொடுப்பது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி அரூர், பாப்பரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மொபைல் அசோசியேஷன் தலைவர் ஆனந்தன் தலைமையிலான வணிகர்களும் அரூர் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தில் இணைந்து கொண்டனர்.

Tags:    

Similar News