கம்பை நல்லூர் அருகே இளம்பெண் உயிரிழப்பு: ஆர்.டி.ஓ விசாரணை

கம்பை நல்லூர் அருகே இளம்பெண் உயிரிழப்பு: ஆர்.டி.ஓ விசாரணை

Update: 2021-08-29 14:30 GMT

கம்பைநல்லுார் அருகே, இளம்பெண் இறந்தது குறித்து ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பட்டகப்பட்டியை சேர்ந்தவர் பொன்மணி, வயது ,22, இவருக்கும், வெதரம்பட்டி புதுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொன்மணி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று  அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்மணி அனுமதிக்கப்பட்டார். பின், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பொன்மணியின் தந்தை கோவிந்தன், 52, இன்று  கம்பைநல்லுார்  போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து 

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால்,ஆர்.டி.ஓ.விசாரணைக்கு பணிந்து அனுப்பினர். அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News