அரூரில் 9 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் அரூரில், இன்று ஒன்பது இடங்களில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-28 15:14 GMT

அரூர் பகுதியில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஒன்பது கிராமங்களில் சிறப்பு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவக்குழு சார்பில், பச்சினாம்பட்டி, நாசன்கொட்டாய், சின்னாங்குப்பம், கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, கீரைப்பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், மருத்துவக்குழுவினர் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Tags:    

Similar News