வள்ளிமதுரை வரட்டாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்தார்.

Update: 2022-04-18 07:00 GMT

அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்தார்.

அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை  நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டு 18.04.21 முதல் 25 ஏரிகள் பாசன வசதி பெறும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 2255 ஏக்கர் நிலங்களுக்கு 20 நாட்களுக்கும், நேரடி பாசனம் மூலம் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்களும், 20 நாள் என 40 நாட்களுக்கு 18.04.21 முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று விநாடிக்கு 30 கன அடி தண்ணீரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்து மலர் தூவினார்.

இதன் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, புதூர், எல்லப்புடையாம்பட்டி ஆகிய 25 கிராமங்களில் உள்ள 5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த விழாவில் எம்பி செந்தில்குமார், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கொண்டனர்.

Tags:    

Similar News