அரூர் பேருந்து நிலையம் அருகே பெண் பச்சிளம் குழந்தை மீட்பு

அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சைக்கிள் ஸ்டாண்டில் 3 நாளே ஆன பெண் பச்சிளம் குழந்தை மீட்பு.

Update: 2021-10-08 06:00 GMT

மீட்கப்பட்ட பெண் குழந்தை.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சைக்கிள் ஸ்டாண்ட்டில் பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டு சென்றுள்ளனர். பைக் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்கச் வந்த ஒருவர், குழந்தை இருப்பதை பார்த்து, பைக் ஸ்டாண்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

பைக் ஸ்டான்டின் உரிமையாளர் மாற்றுத்திறனாளி என்பதால், குழந்தையை பார்த்த நபரே பேருந்து நிலையத்தில் இருந்த காவலரை அழைத்து வந்து குழந்தையை காண்பித்தார்.  குழந்தை குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியாததால் அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள், சிறுவர்கள் என இந்த குழந்தையை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

பின்பு இந்த பச்சிளம் குழந்தையை அரூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற நபர்கள் அதன் தொட்டிலில் குழந்தைக்கு தேவையான மாற்றுத் துணிகள், பால் பவுடர், பால் புட்டி, டானிக் உள்ளிட்டவைகள் வைத்துச் சென்றுள்ளனர். அதன் அருகே பொம்மிடி பகுதியில் இருந்து கடத்தூர் வரை சென்ற பேருந்து பயண சீட்டையும் தவறவிட்டு சென்றுள்ளனர். பச்சிளம் பெண் குழந்தையை விட்டுச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News