அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-03-29 05:30 GMT

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வாச்சாத்தியை சேர்ந்தவர் மூக்கன் மகன் தர்மலிங்கம்,வயது 50.

இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக தனது இரு சக்கர வாகனத்தில் அரூர் சென்றார். பின்பு மாலை வாச்சாத்தி க்கு செல்ல அரூர்-சேலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கோபிநாதம்பட்டி கூட்ரோட்டை தாண்டி வாச்சாத்தி பிரிவு சாலைக்கு செல்லும்போது எதிரே வந்த கார் தர்மலிங்கம் பைக் மீது மோதியதில் தர்மலிங்கம் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தர்மலிங்கம் மனைவி ராமாயி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News