அரூர் அருகே தீ விபத்து, பெண் பலி

Update: 2020-12-27 05:15 GMT

அரூர் அருகே தீ விபத்து ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலியானார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவுக்கு உட்பட்ட கோட்டப்பட்டியை அடுத்த பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ஜடையச்சி (65).இவர் வாய்பேச முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தாராம்.நேற்று முன் தினம் குளிர் காய நெருப்பு பற்ற வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜடைச்சி சேலையில் தீப்பிடித்தது இதனையடுத்து உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News